மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/காடும் பாடியதோ

விக்கிமூலம் இலிருந்து

43. காடும் பாடியதோ?

அழகிய காடு. வானளாவிய மரங்கள் தண்ணிர்த் கடாகங்கள். ஆடும் மயில்கள். பாடும் குயில்கள். பற்பல விலங்குகள் எங்கும் எழில் தவழ்கிறது. குன்று போன்ற யானைகள் உலவுகின்றன. எங்குப் பார்த்தாலும் யானைக் கூட்டம். இந்தக் காட்டில் இத்தனை யானைகளா? அற்புதம்தான். எங்கிருந்து வந்தன இத்தனை யானைகள். இந்தக் காடு ஆய் வள்ளலின் மலையைப் பாடியிருக்குமோ? ஆயின் மலை தந்த பரிசிலாகத் தான் இருக்க வேண்டும் இந்த யானைகள்!