மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/புறப்படு போர்க்களத்திற்கு!

விக்கிமூலம் இலிருந்து

24. புறப்படு போர்க் களத்திற்கு!

“விறலியே புறப்படு” என்றான் பாணன்.

“எங்கே? என்றாள் விறலி.

“போர்க்களத்திற்கு”

“ஐயோ நான் மாட்டேன், பயமாயிருக்கிறது”

“போர் செய்யவல்ல, பொருள் வாங்க”

“செத்த வீட்டில் தருமமா? போர்க்களத்தில் பரிசா?”

சாதாரண போர்க்களம் அல்ல விறலி, பெருவழுதியின் போர்க்க்ளம். கிழப் பருந்திற்கும் விருந்தளிக்கும் பெரு வழுதி நம்மையா சும்மா விடுவான். தயங்காதே. விரைவில் புறப்படு. அமுதம் கிடைக்கும். அழகிய பட்டாடை கிடைக்கும் விதவித நகைகளும் கிடைக்கும்.

துள்ளிழெந்தாள் விறலி.