முல்லைக்காடு/ஏற்றப் பாட்டு

விக்கிமூலம் இலிருந்து

ஏற்றப்பாட்டு


  1. ஆழஉழுதம்பி அத்தனையும் பொன்னாம்!
     அத்தனையும் பொன்னாம் புத்தம்புது நெல்லாம்!

  2. செட்டிமகள் வந்தாள் சிரித்துவிட்டுப் போனாள்!
     சிரித்துவிட்டுப் போனாள் சிறுக்கி துரும்பானாள்!

  3. ஆற்றுமணல்போலே அள்ளி அள்ளிப் போட்டாள்
     அத்தனையும் பொன்னாம் அன்புமனந் தாண்டி!

  4. கீற்று முடைந்தாளே கிளியலகு வாயாள்
     நேற்றுச் சிறுகுட்டி இன்று பெரிசானாள்!

  5. தோட்டங்கொத்தும் வீரன் தொந்தரவு செய்தான்
     தொந்தரவுக் குள்ளே தோழிசுகம் கண்டாள்!