முல்லைக்காடு/கல்வி

விக்கிமூலம் இலிருந்து

4. சிறுவர் பகுதி

கல்வி

(மகாவதி குண மாதர வேகமாய் எ-மெ)

(தந்தை தநயனுக் குரைத்தல்)


1. சுல்வியின் மிக்கதாம் செல்வமொன் றில்லையே
கண்மணி கேளடா நீஎன்றன் சொல்லையே!
செல்வம் பிறக்கும்நாம்   தந்திடில் தீர்ந்திடும்,
கல்வி தருந்தொறும் மிகச் சேர்ந்திடும்

2. கல்வியுள்ளவரே கண்ணுள்ளார் என்னலாம்
கல்வியில்லாதவர் கண் புண்ணென்றே பன்னலாம்
கல்வி மிகுந்திடில் கழிந்திடும் கடமை!
கற்பதுவே உன் முதற் கடமை.

3. இளமையிற் கல்லென இசைக்கும் ஔவையார்
இன்பக் கருத்தை நீ சிந்திப்பாய் செவ்வையாய்!
இளமை கழிந்திடில் ஏறுமோ கல்விதான்?
இப்பொழு தேயுண் இனித்திடும் தேன், (கல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=முல்லைக்காடு/கல்வி&oldid=1508386" இலிருந்து மீள்விக்கப்பட்டது