முல்லைக்காடு/கொடை வாழ்க

விக்கிமூலம் இலிருந்து

கொடை வாழ்க!

எக்காளக் குயில்

வெண்பா

நின்றசெங் காந்தட்பூ நேரிற்கை யேந்தநெடுங்
கொன்றைமலர்ப் பொன்னைக் கொட்டுகின்றாள்-என்றே
அடைகுயில்கள் எக்காளம் ஆர்த்தனவே மண்ணிற்
கொடை வாழ்க என்று குறித்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=முல்லைக்காடு/கொடை_வாழ்க&oldid=1508162" இலிருந்து மீள்விக்கப்பட்டது