வினாவெண்பா

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக



உமாபதி சிவாச்சாரியார் அருளிச்செய்த[தொகு]

வினா வெண்பா- மூலம்[தொகு]

வெண்பா 01 (நீடுமொளியும் )[தொகு]

நீடு மொளியு நிறையிருளு மோரிடத்துக் () நீடும் ஒளியும் நிறை இருளும் ஓர் இடத்துக்

கூட லரிது கொடுவினையேன்- பாடிதன்முன் () கூடல் அரிது கொடு வினையேன் - பாடு இதன் முன்

னொன்றவார் சோலை யுயர்மருதச் சம்பந்தா () ஒன்ற வார் சோலை உயர் மருதச் சம்பந்தா

நின்றவா றெவ்வாறு நீ. () நின்றவாறு எவ்வாறு நீ.



வெண்பா 02 (இருளிலொளி )[தொகு]

இருளி லொளிபுரையு மெய்துங் கலாதி () இருளில் ஒளி புரையும் எய்தும் கலாதி

மருளி னிலையருளு மானுங் - கருவியிவை () மருளின் நிலை அருளும் மானும் - கருவி இவை

நீங்கி னிருளா நிறைமருதச் சம்பந்தா () நீங்கின் இருளாம் நிறை மருதச் சம்பந்தா

வீங்குனரு ளாலென் பெற. () ஈங்கு உன் அருளால் என் பெற.


வெண்பா 03 (புல்லறிவு )[தொகு]

புல்லறிவு நல்லுணர்வ தாகா பொதுஞான () புல் அறிவு நல் உணர்வது ஆகா பொது ஞானம்

மல்லதில துள்ளதெனி லந்நியமாந் - தொல்லையிரு () அல்லது இலது உள்ளளது எனில் அந்நியமாம் - தொல்லை இருள்

ளூனமலை யாவா றுயர்மருதச் சம்பந்தா () ஊனம் மலையாவாறு உயர் மருதச் சம்பந்தா

ஞானமலை யாவாய் நவில். () ஞான மலை ஆவாய் நவில்.


வெண்பா 04 (கனவு)[தொகு]

கனவு கனவென்று காண்பரிதாங் காணில் () கனவு கனவு என்று காண்பு அரிதாம் காணில்

நனவி லவைசிறிதும் நண்ணா - முனைவனரு () நனவில் அவை சிறிதும் நண்ணா - முனைவன் அருள்

டானவற்றிலொன்றா தடமருதச் சம்பந்தா () தான் அவற்றில் ஒன்றா தட மருதச் சம்பந்தா

யானவத்தை காணுமா றென். () யான் அவத்தை காணுமாறு என்.


வெண்பா 05 (அறிவறிந்த )[தொகு]

அறிவறிந்த தெல்லா மசத்தாகு மாயின் () அறிவு அறிந்தது எல்லாம் அசத்து ஆகும் ஆயின்

குறியிறந்த நின்னுணர்விற் கூடா - பொறிபுலன்கள் () குறி இறந்த நின் உணர்வின் கூடா - பொறி புலன்கள்

தாமா வறியா தடமருதச் சம்பந்தா () தாமா அறியா தட மருதச் சம்பந்தா

யாமா ரறிவா ரினி. () யாம் ஆர் அறிவார் இனி.



வெண்பா 06 (சிற்றறிவு )[தொகு]

சிற்றறிவு முற்சிதையிற் சேர்வாரின் றாஞ்சிறிது () சிற்றறிவு முன் சிதையின் சேர்வார் இன்றாம் சிறிது

மற்றதனில் நிற்கிலருள் மன்னாவாந்- துற்றமுகில் () மற்று அதனில் நிற்கில் அருள் மன்னாவாம்- துற்ற முகில்

மின்கொண்ட சோலை வியன்மருதச் சம்பந்தா () மின் கொண்ட சோலை வியன் மருதச் சம்பந்தா

வென்கொண்டு காண்பே னியான். () என் கொண்டு காண்பேன் யான்.


வெண்பா 07 (உன்னரிய )[தொகு]

உன்னரிய நின்னுணர்வ தோங்கியக்கா லொண்கருவி () உன் அரிய நின் உணர்வது ஓங்கியக்கால் ஒண் கருவி

தன்னளவு நண்ணரிது தானாகும் - என்னறிவு () தன் அளவும் நண் அரிது தானாகும் - என் அறிவு

தானறிய வாரா தடமருதச் சம்பந்தா () தான் அறிய வாராது தட மருதச் சம்பந்தா

யானறிவ தெவ்வா றினி. () யான் அறிவது எவ்வாறு இனி.


வெண்பா 08 (அருவேல் )[தொகு]

அருவே லுருவன் றுருவே லருவன் () அருவேல் உரு அன்று, உருவேல் அரு அன்று

றிருவேறு மொன்றிற் கிசையா - வுருவோரிற் () இருவேறும் ஒன்றிற்கு இசையா - உரு ஓரில்

காணி லுயர்கடந்தைச் சம்பந்தா கண்டவுடற் () காணில் உயர் கடந்தைச் சம்பந்தா கண்ட உடல்

பூணுமிறைக் கென்னாம் புகல். () பூணும் இறைக்கு என் ஆம் புகல்.

வெண்பா 09 (இருமலத்தார்க் )[தொகு]

இருமலத்தார்க்கில்லை யுடல்வினையென் செய்யு () இரு மலத்தார்க்கு இல்லை உடல் வினை என் செய்யும்

மொருமலத்தார்க் காரா யுரைப்பேன் - திரிமலத்தா () ஒரு மலத்தார்க்கு ஆராய் உரைப்பேன் - திரி மலத்தார்

ரொன்றாக வுள்ளா ருயர்மருதச் சம்பந்தா () ஒன்றாக உள்ளார் உயர் மருதச் சம்பந்தா

வன்றாகி லாமா றருள். () அன்று ஆகில் ஆமாறு அருள்.


வெண்பா 10 (ஒன்றிரண்டாய் )[தொகு]

ஒன்றிரண்டாய் நின்றொன்றி லோர்மையதா மொன்றாக () ஒன்று இரண்டாய் நின்று ஒன்றில் ஓர்மையதாம் ஒன்றாக

நின்றிரண்டா மென்னிலுயிர் நேராகுந் - துன்றிருந்தார் () நின்று இரண்டாம் என்னில் உயிர் நேராகும்- துன்று இருந்தார்

தாங்கியவாழ் தண்கடந்தைச் சம்பந்தா யானாகி () தாங்கிய வாழ் தண் கடந்தைச் சம்பந்தா யான் ஆகி

வோங்கியவா றெவ்வா றுரை. () ஓங்கியவாறு எவ்வாறு உரை.


வெண்பா 11 (காண்பானுங் )[தொகு]

காண்பானுங் காட்டுவதுங் காண்பதுவு னீத்துண்மை () காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் நீத்து உண்மை

காண்பார்கள் நன்முத்தி காணார்கள் - காண்பானுங் () காண்பார்கள் நல் முத்தி காணார்கள்- காண்பானும்

காட்டுவதுங் காண்பதுவுந் தண்கடந்தைச் சம்பந்தன் () காட்டுவதும் காண்பதுவும் தண் கடந்தைச் சம்பந்தன்

வாட்டுநெறி வாரா தவர். () வாட்டும் நெறி வாராதாவர்.


வெண்பா 12 (ஒன்றி )[தொகு]

ஒன்றி நுகர்வதிவ னூணு முறுதொழிலு () ஒன்றி நுகர்வது இவன் ஊணும் உறு தொழிலும்

மென்று மிடையி லிடமில்லை - யொன்றித் () என்றும் இடையில் இடம் இல்லை - ஒன்றித்

தெரியா வருள்மருதச் சம்பந்தா சேர்ந்து () தெரியா அருள் மருதச் சம்பந்தா சேர்ந்து

பிரியாவா றெவ்வாறு பேசு. () பிரியாவாறு எவ்வாறு பேசு.


வெண்பா 13 (அருளாலுணர் )[தொகு]

அருளா லுணர்வார்க் ககலாத செம்மைப் () அருளால் உணர்வார்க்கு அகலாத செம்மைப்

பொருளாகி நிற்கும் பொருந்தித் - தெருளா () பொருள் ஆகி நிற்கும் பொருந்தித் - தெருளா

வினாவெண்பா வுண்மை வினவாரே லூமன் () வினா வெண்பா உண்மை வினவாரேல் ஊமன்

கனாவின்பா லெய்துவிக்குங் காண். () கனாவின் பால் எய்துவிக்கும் காண்.


உமாபதி சிவாச்சாரியார் அருளிச்செய்த வினாவெண்பா முற்றும்

பார்க்க:[தொகு]

சிவஞானபோதம்
உண்மைநெறிவிளக்கம்
திருவருட்பயன்
இருபாஇருபது
உண்மைவிளக்கம்
சித்தாந்தச் சாத்திரங்கள்
"https://ta.wikisource.org/w/index.php?title=வினாவெண்பா&oldid=718596" இலிருந்து மீள்விக்கப்பட்டது