உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



40

இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

வதும் உண்டெனிலும், அத்தாதி அதிகமாக அவற்றிற்கு இடங் தருவதில்லை; அதாவது, மற்றவர்கள் சிறு பிள்ளைகளோ, பெரியவர்களோ யாராயினும் என்னிடம் தாராளமாக நெருங்கிப் பழகவும், கொஞ்சிக் குலாவவும் அவள் அநுமதிப்பதேயில்லை என்று என் தாய் கூட அதையொரு குறையாக எடுத்துக் கூற நான் கேட்டிருக்கிறேன். அவ்வாறு ‘மேட்டிமை’யாக என் இளமைப் பருவங் கழிந்தது. அவ்வித நிலையை, நான் அப்போது ஒரு பெருமையாக நினைத்திருக்கக் கூடுமாயினும், இச்சமயம் அதை அறவே வெறுக்கிறேன்.


மூன்றாவது அதிகாரம்


கலாசாலை வாழ்க்கை

ன் அறிவு தெரிந்தது முதல், அவ்வெள்ளைக்காரத் தாதி என்னிடம் ஆங்கிலத்திலேயே பேசி என்னைப் பழக்கி வந்தாள். ஆகையால், நான் கல்வி கற்றற்குரிய பருவம் வந்ததும், என் தந்தை அத்தாதியினது யோசனைப்படி, ஆங்கிலேயப் பிள்ளைகள் வாசிக்கும் பாடசாலையிலேயே என்னைப் படிக்க வைத்தார். இவ்விஷயத்திலெல்லாம் என் தாய்—கர்நாடகம் என்று சொல்வதற்கில்லை—ஒரு மிதவாதியாகவே யிருந்து வந்தாள். வெள்ளைக்காரத் தாதி முதலிலிருந்தே எனக்கு ஆங்கிலத்தில் பேசப் பழக்கி வந்ததையே, அவ்வளவாக அவள் விரும்பாதிருந்தாள். பின்னர், ஆங்கிலக் கல்லூரியில் என்னைப் படிக்க வைக்க வேண்டுமென்றதும், அவள் அது கூடாதென்று அடியோடு தடுத்து, என் தந்தையுடன் வாதாடினாள். இருந்தாலும் என் தந்தை ஒரே பிடியாக அத்தாதியின் யோசனையை நிறைவேற்றி வைத்-