ஒய்யாரி - 警 மோகினி பலே கைகாரி. அவள் கெளரவமான வளாகக் காட்சி யளித்தாலும் எல்லாத் தொழிற் காரீ களிடமும் உள்ள பண்பு தான் இருக்கிறது. அவனது நண்பர்கள் சொல்வதுண்டு - இம்மாதிரிப் பெண்களிடம் ரொம்ப எச்சரிக்கையாகப் பழக வேண்டும். கொஞ்சம் ஏமாத்தலே போதும், தளுக்கி மினுக்கிக் குலுக்கி, கட்டிக் கொடுத்து சரி தம்பி, போயிட்டு வா’ என்று அனுப்பி விடுவார்கள். ஆனல் பணத்தைப் பிடுங்கிக் கொள்ள மறகக Lుf LL##á శif, அவனுடைய முதல் அனுபவமே அப்படித் தான் முடிந்தது. அவனுக்கு சொம்பகாளாக ஆசை யிருந்தது, அது மாதிரியான வீடு ஒன்றுக்குச் சென்று திரும்ப வேண்டு மென்று. பையில் இருபது ரூபாய் எடுத்து வைத்துக்கொண்டு அந்திமத்தாசை'கள் மலர்ந்து கிற்கும் தெருப்பக்கம் போனன். கதவின் பி ன் கின்று கைஜாடை காட்டியவர்களும், வாசல் படியில் கின் து ‘வா வா என அழைத்தவர்களும், கண்ணடித்துக் கடப்பிட்டவர்களும் - அந்த அனுபவமே அவனுக்குப் புதிது. பட்டனத்து எக்வலி பிஷனில் நுழைந்த பட்டிக் காட்டான் மாதிரி மிரளமிாள விழித்தபடி நடந்தான். சிலர் சிரித்தார்கள். அவர்கள் தன்னைக் கேலி செய் கிருர்கள் என்றே கருதினன். இங்கே வாங்களேன்’ என் முள் ஒருத்தி. பார்த்தான். பரவால்லே என்று வீட்டி அள் புகுந்து விட்டான். அவள் கதவடைத்து விட்டுப் பின் சென்ருள். பையன் புதுசு என்பது அவளுக்கு சுலபமாகவே புரிந்து விட்டது. அன்பாகத் தொட்டு அழைத்துச் சென்று பாயில் உட்கார வைத்தாள். தானும் அருகமர்ந்து என்னென்னவோ சொன்னுள். கேட்டாள். செய்தாள். அவனுக்கு பயம். அவன் இதயம் சைஸ்மீன் மாதிரி 'திக்கு திக்கு என்றடித்தது. இங்கு ஏனடா வங்தோம் என்று முழித்துக் கொண்டு உட்கார்த்திருக் தான். அவள் கிச்சுக் கிச்சு காட்டி விளையாடிசூன்.
பக்கம்:ஒய்யாரி.pdf/39
Appearance