36 கட்டுரை வளம்
நல்ல பண்புடைய பெண் மக்களைப் பெற வேண்டும் என்று கேட்டு இறைவன் திருவருளை இறைஞ்சுகின்றனர் என்பதனால் பெண்மக்கட் பேற்றின் சிறப்புப் புலனாகும். இதனை,
“குன்றக் குறவன் கடவுட் பேணி
இரங்தனன் பெற்ற எல் வளைக் குறுமகள்’
- ஐங்குறுநூறு 257: 1-2 என்னும் கபிலர் வாக்கால் உணரலாம். நல்ல ஒழுக்கம் நிறைந்த பெண் வைகறையில் துயிலுணர்ந்து த்ன் கண வனைத் தொழுதெழுந்தாள் என்று திருவள்ளுவர் குறிப் பிடுவார் :
“தெய்வங் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
-திருக்குறள், 55 ‘தன்னால் விரும்பப்பட்ட தலைவனையே தனக்கு வாழ்க்கைத் துணைவனாக அளிக்க வேண்டும்’ என்று தன் குலமுதற் - கடவுளாம் குமரனை நன்னிரும் நறுமலரும் கொண்டு இறைஞ்சுகின்றாள் மலைவாழ்மங்கையொருத்தி.
“குன்றக் குறவன் கரதன் மடமகள்
மன்ற வேங்கை மலர்சில கொண்டு மலையுறை கடவுள் குல முதல் வழுத்தி’
- ஐங்குறுநூறு, 259 : 1-3 என்பது அப்பாடல்.
இத்தகைய நல்ல பண்புகள் நிறைந்த தலைவி, தலை வன் பெற்ற பேறுகளில் தலைசிறந்த பேறாவள். இது குறித்தே வள்ளுவரும்,
இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென் இல்லவள் மாணாக் கடை?:
-திருக்குறள்; 53 என்று குறிப்பிட்டார். துரங்கலோரி’ என்ற சங்க காலப் புலவரும் ஒரு பசுவினால் வரும் ஊதியத்தைக் கொண்டு உண்ணும் உணவையுடைய செல்வச்சிறப்பில்லாத இல்