இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
35
தலைநகர் தலைநகர்தான்
ஆளுயரச் சுவரொட்டியில்
ஒன்றேனும்
காண முடியுமா....
இந்தப் பட்டி தொட்டியில்.
36
துருபதன் மகளை
நிருவாணக் கோலத்தில்
நிறுத்த நினைத்த
நீசர்க் கெதிராய்க்
கண்ணன் கொடுத்த துகில்,
இன்னுமா நீள்கிறது
குற்றாலத்தில்?
40 ◯ குக்கூ