இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
27
தெய்வம் குடியிருக்கும் திருக்கோயில்களிலே பக்தியைய தவிர மற்ற எல்லா உணர்ச்சிகளும் நிலவுகின்றன. காமம் தலைவிரித்து நடனமாடுகிறது, டம்பம், ஆணவம். அதிகாரம் எல்லாம் 'கச்சைக்கால்' கொட்டுகின்றன அங்கே. இந்நிலை மாற வேண்டும் கடவுள், கடவுள் என்று கண்ணைக் கட்டிவிட்டு ஒரு சிலர் உயர்வதை அறிவுலகம் சகித்துக் கொண்டிருக்க முடியாது.
இதற்கு ஒரே ஒரு, மாற்றுதான் உண்டு. 'கோயில்களை மூடுங்கள்!' என்பதே அது.
கலாசாரத்தில் உயர்ந்து
- உலகம் போற்றத் திகழ்ந்த
திராவிட நாட்டின் சிறப்பைச் சீரழிந்ததுயார்?
- தமிழ் மக்களின் மாண்பை
மண்ணோடு மண்ணாக்கிய குற்றவாளி யார்?
- விசாரணை நடத்த வேண்டாமா?
தில்லைவில்லாளன்
- தமிழர் நீதிமன்றத்திலே கூட்டுகிறார்.
முதல் விசாரணை
ஆணித்தரமான சாட்சிகளுடன்
சிறந்த சிந்தனை நூல்
- தயாராகிறது
இது எரிமலைப் பதிப்பக வெளியீடு