இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ix
- குரல்-1, குரல்-2, குரல்-3, குரல்-4 எனப்
- பின்னணிக்காக அமைத்த முறைமை
- 'நவீன மேடை நாடக' மரபில்
- 'எடுத்துரைஞர்' உத்தியை இயம்புமாப்போல
- எழுத்துரு அமைப்பில் இருப்பதைக் காணலாம்.
- நாடகத்தமிழில் வைத்த இந்த ஈடுபாடே,
- 'சிறு வயது முதல் (24) நாடகத்தில் ஈடுபட்டு
- ஐம்பத்தைந்து வயதிற்குள் (1867-1922),
- நாற்பத்தெட்டு நாடகங்களை இயற்றி மேடையேற்றிய சங்கரதாச சுவாமிகள்' செயலில் மதிப்பு வைத்து -
- அவர் நினைவுச் சொற்பொழிவில் பங்கு பெற்று
- 'தமிழ் நாடக வரலாறு' பற்றியும்
- 'சங்கரதாச சுவாமிகள்' பற்றியும்
- எடுத்தோத வைத்ததென்றே
- எண்ணத் தோன்றுகிறது.
- இந்தச் சொற்பெருக்கை,
- 1971ஆம் ஆண்டிலேயே-
- மதுரைப் பல்கலைக் கழகத்தில்-
- ஐயா நிறைத்திருந்தார்.
- ஆனால்,
- ஐயாவின் துறையோ பின் 'இயலா'க அமைந்ததால் அக்கறை இன்றியே பூட்டப்பட்டிருந்தது.
- இரு மாதம் முன்னே...... . .
- வேறுலகை நோக்கி ஐயா விரைய,
- இருப்பவை பலதையும் எடுக்கத் தொடங்கினோம்.
- ஐயாவின் இளைய மகள் மீரா அவர்கள்