இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
X
- சேர்த்து வைத்தவற்றை வெளியில் கொணர்ந்தார்.
- தூசு மூடிய சுவடிகள் போல
- இருந்த அவற்றைத் துவட்டிப் படித்தோம்.
- முதலில் கிடைத்த முத்துப் போல
- 'முத்தமிழ் நாடகச் சங்கதி' கிடைத்தது.
- சிலப்பதிகார 'அரங்கேற்று காதை'யும்
- அடியார்க்கு நல்லார் வகுத்த உரையும்
- தொல்காப்பியத்தின் 'மெய்ப்பாட்'டியல்புகள்
- நாடக வழக்கில் விரிந்த முறையும்
- ஐயாவின் பிரதியில் உயிர்ப்புடன் இருந்தன.
- இந்த இடத்தில்
- இன்னொன்றைச் சொல்லலாம்.
- நாடகம் தெரிந்த நண்பர்களுடனே
- பேசும் போதில் ஒன்றைப் புகல்வார். .
- 'சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையை,
- நாட்டியத்தூடு நாடகம் விளைக்கும்
- பத்மா சுப்பிரமணியத் தோடிணைந்து
- உருப்படியாக ஆக்க விழைந்தேன்;
- கூறுமிடங்களில் கூறியும் பார்த்தேன்.
- அங்கீகாரம் கிடைத்த போதும்
- அனுசரணைகள் கிடைக்கப் பெறாமையால்
- எடுத்த முயற்சியை விட்டே விட்டேன்.'
- என்றபடியாய் ஆதங்கப்பட்டுக்
- குமைந்து விரக்தியில் தலையை அசைப்பார்.
- அரங்கேற்று காதையைக்
- 'களப்படுத்தி' ஆற்றுகின்ற