இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தொகுப்புரை
-
யாழ்ப்பாணம். ச. மார்க்கண்டு.
-
- அறிமுகம் தொடங்கிய நாட்களில்
- ஆற்றல் வாய்ந்த இயற்றமிழ் வித்தகராகவே ஐயாவை* உணர்ந்திருந்தேன்.
- நாட்செல்லச்செல்ல
- முத்தமிழிலும் வல்ல மூதறிஞர் அவரென்பதை :விஸ்வரூதரிசனமாய்க் கண்டு வியப்புற்றேன்.
-
- ஆனாலும்,
- தமிழைப்போலவே.....
- இசையையும் நாடகத்தையும்
- ஒரளவு புறம்விட்டு,
- இயற்றமிழ்ச் சித்தராகவே ஐயா உலாவந்தார்.
-
- இன்தமிழ்ச் சொற்களைச்
- சபைகளிற் பெருக்கும்போதில்-
- நகைமுதல் தொடர்ந்த ஒன்பான் சுவையும்
- சிறுசிறு அளவில் 'முகத்தினிற் காட்டி',
- குரல்வழி ஏற்றமும் இறக்கமும் சேர்த்துக்-
- 'கதை சொல்லற் பாங்கி'ல் வெளிவரச் செய்வார்.
-
- "பாத்திரம்” இரண்டு பேசுவதாயின்
- 'உரையாடல் உத்தியும் அங்கு அமையும்.
-
-
- பேராசிரியர் அ.ச.ஞா.