இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
viii
- தவிர,
- நாடகக் கதைக்கோப்பை ஐந்தாகப் பிரித்து
- 'அறிமுகம், வளர்ச்சி, உச்சம், தீர்வு,
- விளை'வெனப் பலரும் வகுத்திருப்பதுபோல்
- 'மேடைப் பேச்சிலும் இந்தச் சாயலில்’
- வெற்றிகள் கொணர்வது ஐயாவின் வழக்கம்.
- இவை,
- இயற்கையாய் அமைந்தவையோ,
- முயன்று பயின்றவையோ,
- பயிற்சியின் முதிர்ச்சியால் பழக்கப்பட்டவையோ
- எதுவாக இருப்பினும்
- நாடக அம்சங்கள் பொதிந்தவை என்பதில்
- நாடக இயலார் சந்தேகம் கொள்ளார்.
- இதனால்தான்,
- சென்னை வானொலியில் சேவைசெய்தபோது (1956-1959) :அலைவரிசையூடு நாடகங்கள் பலதையும்
- செவியேற்றம் செய்ய முடிந்ததுபோலும்!
- அதற்காகவே,
- வானொலி நாடகம் பலவற்றினையும்
- ‘எழுத்துரு'வாகவும் வெளியிற் கொணர்ந்தார்.
- 'தெள்ளாற்று நந்தி” நாடகத்தொகுதி
- இதனால் முகிழ்த்த மலரெனக் கூறலாம்.
- இத்தொகுதியிலொன்று,
- 'கைலாசநாதர் கோயிலெனும் சித்திரம்.
- இதில்,