இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தைப்பாவாய்
29
உதயங்காணாத் தாமரை நான்!
ஒளியை உமிழா வைரமும் நான்!
இதயம் எனினும் கலசமுண்டு; அதில்
இன்பமதுவோ துளியுமில்லை!
ஏற்றிவையா தீபம் நான்!
எழுதி முடியாக் காவியம் நான்!
காற்றின் செல்வத் தென்றலுண்டு - அது
கமழ்ந்து தவழ்ந்திடச் சோலை இல்லை!
மலையைத் தழுவாக் கருமுகில் நான்!
இலைகள் விரித்த பந்தியுண்டு; - அதில்
மாலை யாகா அரும்புகள் நான்!
இன்னமு தின்னும் படைக்கவில்லை!