இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சேர்க்க மாட்டாயா ?
தேஷ்
ஆதி
துள்ளி யோடும் புள்ளி மானே !
துணையை விட்டுச் செல்லாயா ?-உன்
துணையை விட்டுச் செல்லாயா ?
உள்ளம் வெம்ப உறக்கம் நீங்க
உருக்குலைந்தேன் ; கூறாயா ?—நான்
உருக்குலைந்தேன்; கூறாயா ?—
அருவி யாடிக் குன்றம் பாடி
அணைப்பில் வாழ்ந்த நானோ—அன்பன்
அணைப்பில் வாழ்ந்த நானோ -
இருண்ட வானம் ஆனேன் அந்தோ !
எடுத்துக் கூறமாட்டாயா ?—சென்று
எடுத்துக் கூறமாட்டாயா ? -
முல்லை பூக்க வருவேன் என்று
சொல்லிப் போன அன்பன் — அன்று
சொல்லிப் போன அன்பன்
கல்லுடைக்கும் மார்பை எண்ணிக்
கலங்குவதைக் கூறாயா ?—நான்
கலங்குவதைக் கூறாயா ?
பிரியும் என்னுயிர் நிலைத்திருக்கப்
பேச்சைக் கேட்க வேண்டும் —அன்பன்
பேச்சைக் கேட்க வேண்டும்
விரைவில் சென்று பிரிந்ததோளை
மீட்டுச் சேர்க்க மாட்டாயா ?— நீ
மீட்டுச் சேர்க்க மாட்டாயா ?
29