இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உயிராக நினை மகனே !
சூலினி திரிபுடை
எடுப்பு
உயிராக நினை மகனே!-திராவிடத்தை
உயிராக நினை மகனே!
மேல் எடுப்பு
அயராமல் உழைத்து நீ அறிவைப் பெருக்கி நாளும்
அமைதி
வற்றாத ஆறுகள் மலைபடு செல்வங்கள்
பெற்றிருந்தும் நீயேன் நிற்கிறாய் கையேந்தி
கொற்கையை அறியாயோ கோலேந்தத் தெரியாயோ
எதற்குத் தயங்குகின்றாய் எழுந்திரு சிறுத்தையே !
காடும் வயலும் உனைக்கை யேந்தி அழைக்குதே
கைகட்டி வடவரின் கால்பார்த்து நிற்பதேர்
நாடோ உனதுசொத்து நரிக்கென்ன அரசாட்சி!
நலமார் திராவிடத்தை வளமாக்கி வாழலாம்!!
34