இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14
நான்மணிகள்
ஒற்றுமை இல்லாமை வலிமையைக் கெடுக்கும்; தீய ஒழுக்கம் உடம்பைக் கெடுக்கும்; பொருந்தாப் பாண்டம் பாலைக் கெடுக்கம்; கூடா நட்பு குடியைக் கெடுக்கும். (21).
என்றும் பொய்யாமை புகழை உண்டாக்கும்; இகழும் அறியாமை தீமையை உண்டாக்கும். சிறிதும் கல்லாமை பேதைமையை உண்டாக்கும்; சிறந்த அறிவு ஒளியைஉண்டாக்கும் (22)
பாகன் வருத்தினாலும் யானை சுமந்து செல்லும், தாய் அடித்தாலும் பிள்ளை தழுவ வரும்; தவறு செய் தாலும் நண்பர் பொறுப்பர்; நல்லது செய்தாலும் பகைவர் ஒட்டார்வ (23)
நகைநலம் நண்பர்களால் சிறப்படையும்; அவைநலம் அறிஞர்களால் சிறப்புப் பெறும்; தேர்நலம் பாகனாற் பெருமை பெறும்; ஊர்நலம் உள்ளோரால் மதிக்கப் பெறும் . (24)
அஞ்ச வேண்டியவைகளை அஞ்சாது இருக்காதே? உதவி செய்வதில் ஒருபோதும் குறையாதே; நீதி வழங்கு வதில் ஒருபக்கம் சாயாதே. நேர்மையாளர் செயல்களில் ஐயப்பாடு கொள்ளாதே. ( 25)