இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நான்மணிக்கடிகை
21
நான்மணிக்கடிகை 21
மையாற் றளிர்க்கும் மலர்க்கண் - மாவிருள் நெய்யாற் றளிர்க்கும் நிமிர்சுடர் - பெய்யல் முழங்கத் தளிர்க்குங் குருகிலை நட்டார்
வழங்கத் தளிர்க்குமாம் மேல்.
36
நகையினிது நட்டார் நடுவட் பொருளின்
தொகையினிது தொட்டு வழங்கின்-வகையுடைப் பெண்ணினிது பேணி வழிபடிற் பண்ணினிது
பாடல் உணர்வா ரகத்து.
37
கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தலெஞ் ஞான்றும்
இரப்பவர்க்குச் செல்சார் ஒன்றிவார் - பரப்பமைந்த தானைக்குச் செல்சார் தறுகண்மை ஊனுண்டல்
செய்யாமை செல்சார் உயிர்க்கு.
38
கண்டதே செய்பவாங் கம்மியர் உண்டெனக் கேட்டதே செய்ப புலனாள்வார் - வேட்ட இனியவே செய்ப வமைந்தார் முனியாதார்
முன்னிய செய்யுந் திரு.
39
திருவுந் திணைவகையால் நில்லா பெருவலிக்
கூற்றமுங் கூறுவ செய்துண்ணா தாற்ற மறைக்க மறையாதாங் காம முறையும்
இறைவகையால் நின்று விடும்.
40