நான்மணிக்கடிகை
39
நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச்சாம்
குலனும் குடிமையுங் கல்லாமைக் கீழ்ச்சாம்
வளமில் குளத்தின் கீழ் நெற்சாம் பரமல்லாப்
பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு.
(81)
நல்லார்க்குத் தம்மூரென் றூரில்லை - நன்னெறிச் செல்வார்க்குந் தம்மூரென் றூரில்லை - யல்லாக்
கடைகட்குந் தம்மூரென் றுாரில்லை தங்கைத்
துடையார்க்கு மெவ்வூரு மூர்.
(82)
கல்லா வொருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம் மெல்லிலை வாழைக்குத் தானின்ற காய்கூற்றம்
அல்லவை செய்வார்க் கறம்கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள்.
(83)
நீரான்வீ றெய்தும் விளைநிலம் நீர்வழங்கும் பண்டத்தாற் பாடெய்தும் பட்டினம்-கொண்டாளும்
நாட்டான்வீ றெய்துவர் மன்னவர் கூத்தொருவன்.
ஆடலாற் பாடு பெறும்.
(84)
ஒன்றூக்கல் பெண்டிர் தொழினலம் என்றும் நன்றூக்கல் அந்தணர் உள்ளம் - பிறனாளும்
நாடூக்கல் மன்னர் தொழினலம் கேடூக்கல்
கேளிர் ஒரீஇ விடல்.
(85)