இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
{{rh|நான்மணிக்கடிகை||}47}
நான்மணிக்கடிகை 47
வைத்ததனால் ஆகும் வசையே வணக்கமது செய்ததனால் ஆகும் செழுங்கிளை - செய்த பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம்.
101
ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும் ஒருவன் அறியா தவனும் - ஒருவன் குணனடங்கக் குற்றமுள் ளானும் ஒருவன்
கணனடங்கக் கற்றானும் இல்.
102
மனைக்கு விளக்கம் மடவார் மடவார் தமக்குத் தகைசால் புதல்வர் - மனக்கினிய காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்
ஒதிற் புகழ்சால் உணர்வு.
103
இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின் நாவினான் ஆகும் அருண்மனம் அம்மனத்தான்
வீவிலா வீடாய் விடும். .
104
நான்மணிக்கடிகை முற்றிற்று.
நான்மணிக்கடிகை முற்றிற்று