இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
"கட்டிலில் எனது மார்பில்
கனிந்தவென் கனவே! பூமித் தொட்டில் எனைம றந்து தூக்கமா ? கண்ணே! என்று நெட்டுயிர்ப் போட ணைப்பீர்! நெருக்குவீர் ! என்னி டுப்பைத் தொட்டனைக் கின்ற அந்தத் துடுக்குக்கை எங்கே காணோம்?
"அடிமுதல் முடிவ ரைக்கும்
அளக்கின்ற கண்க ளெங்கே? முடிமீதும் முகத்தின் மீதும் மொய்க்கின்ற இதழ்கள் எங்கே? கொடிபோல கான் படுக்கும் - கோபுரத் தோள்க ளெங்கே? வடிகின்ற செந்த மிழ்த்தேன் வார்த்தைவாய் வீணை யெங்கே
"நெருங்கிய காதல் வாழ்க்கை
நிலையற்ற வான வில்போல் வெறுங்கன வான பின்னர் வேறென்ன எனக்குத் தேவை? கருங்குழல் எரிந்த பின்னர் கரியேது ? சாம்ப லேது ? வருங்காலம் என்ப தெல்லாம் வாழ்வினில் இனிமேல் ஏது ?
26 பனித்துளிகள்