இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கண்ணே கண்ணுறங்கு—கட்டிக்
கரும்பே கண்ணுறங்கு!
மண்ணைப் பொன்னாக்க—வந்த
மணியே கண்ணுறங்கு!
அன்பில் பிறந்துவந்த—இன்
அமுதே கண்ணுறங்கு!
என்னைப் பெற்றெடுத்த—என்
தாயே கண்ணுறங்கு
பொன்னே கண்ணுறங்கு—புதுப்
பூவே கண்ணுறங்கு !
மின்னல் ஒளிக் கீற்றே—சுவைத்
தேனே கண்ணுறங்கு!