முன் கலாசாலைபோலப் புத்தகசாலையும் அச்சுச்சாலையும் சங் கத்தினங்கமெனக்கொள்க.
கண்டனிர் - இவற்றைக்கண்டு.
கண்டனிரென்னும் வினைமுற்று வினையெச்சமாய் நின்றது.
சங்கம் மண்டபம் புகின் ஏ - சங்கத்து மண்டபத்தின்கட்
புகுவீராயின்,
ஏ-அசை.
தி தமிழ் புணரி மாந்திய மக்கள் உம் - இனிய தமிழ்க் கடலைக் குடித்த மனிதர்களும், -
என்றது தமிழ்ப்புலவர்கள்.
வடமொழி தேர்ந்து திடம் உறுபவர் உம் - சமஸ்கிருதத்திற் றேர்ந்து திடங்கொண்டவர்களும்,
என்றது சமஸ்கிருத பண்டிதர்களை.
ஆங்கிலம் பயின்ற பாங்கர் உம் ஆகி - ஆங்கிலபாடையைக் கற்ற பாவனையுடையவருமாய், -
என்றது. பீ. ஏ., எம். ஏ. க்களே.
புரை அறு நூல்கட்கு உரை செய்குநர் உம் - குற்றமற்ற நூல்களுக்கு உரை செய்வாரும்,
நால் வகை பயக்கும் நூல் செய்குநர் உம் - நான்குவகைப் பயனையும் பயக்கின்ற நூல்களைச் செய்வாரும்,
நால்வகைப் பயன் - அறம், பொருள், இன்பம், வீடு.
முது நூல் ஒரா ஆராய்குநர் உம் என - முதிய நூல்களே யோர்ந்து பழுதாராய் வாருமென்று,
பெரும்புலவர் மருங்கு அமர - பேரறிவினையுடையார் இரு மருங்கு மமர்தலால்,
3.
5
35