மனை ஆட்சி
ஒரு அங்க நாடகம்
முதல் காட்சி
இடம்-திருச்சிராப்பள்ளியில் உயர்தர உபாத்தியாயர் தாமோதர சாஸ்திரியார் வீட்டில் ஒரு பெரிய அறை.
காலம்-சாயங்காலம்.
அறைக்கு மூன்று வாயில்கள் இருக்கின்றன. ஒன்று பின்பக்கமாகவும், மற்ற இரண்டும் இரண்டுபுறத்திலும் அறையில் சில படங்கள் இருக்கின்றன, சில முடிந்ததும் சில அறைகுறையாகவும் படங்களுக்கு வர்ணம் தீட்டும் சாமான்கள் முதலியன ஆங்காங்கு கிடக்கின்றன.பார்வதியும் சகுந்தலாவும் நாற்காலிகளின் மீது உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டிருக்கின்றனர். -
பா . சரியும்-தப்பும் ! நீ ரொம்ப தெரிந்தவள் ! நீ பேசுவதெல்லாம் எனக்கு வேடிக்கையா யிருக்கிறதடி. அந்தக் காலமெல்லாம் அப்பொழுதே மலையேறிப் போய் விட்டது. தற்காலம் உன் காரியம் ஆகிறதற்கு என்ன உபயோகமா யிருக்கிறதோ அதுதான் சரி, அதற்கு எது எடஞ்சலா யிருக்கிறதோ அது தப்பு.
ச. அம்மா! இதென்ன விபரீதம் !
பா. ஆமாம், நான் சொல்வதெல்லாம் உனக்கு விபரீதம், உன் தகப்பனார் செய்வதெல்லாம் நிரம்பசரி, அப்பட்டம் நியாயம் !
ச. நான் அப்படிச் சொல்லவில்லையே அம்மா