நாடகம்
மின்னொளி:- விதைத்தவர் வேலி போடவேண்டும். அறிந்து செயலாற்றுங்கள். மற்றவர்கள் எப் படியோ, உங்கள் அறிவுப்பணியின் அவசி யத்தை நான் உணர்கிறேன். முடிந்தவரை ஒத் துழைக்கவும் விரும்புகிறேன்.
செல்ல :- மிக்க நன்றி.
மின்னொளி :- அன்று, உங்களைக் கண்டபொழுதே என் உள்ளத்தில் ஏதோ ஒரு நம்பிக்கை பிறந் தது. அது நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வருகிறது.
(வயிர முத்து வருகிறான் வெளியினின்றும் அழைக்கிறான்)
வயிர :- மின்னொளி !
மின்னொளி :- யாரது ?
வயிர :- நாந்தான் அத்தை மகன் வயிரமுத்து,
(உள்ளே வந்தவன் செல்லத்துரையைக் கண்டு ஓ வாத் தியாரா? மின்னொளி மாமா எங்கே?
மின்னொளி :- (வெறுப்பாக வெளியே போயிருக்கிறார்).
வயிர :- வாத்தியாரே! தனியா இருக்கிற பொம்பளைக் கிட்டே ஒனக்கு என்ன பேச்சு?
செல்ல :- மணியக்காரரைப் பார்க்க வந்தேன்.
வயிர :- அவர்தான் இல்லையே. போகவேண்டியது தானே?
செல்ல :- (அஞ்சி) நான் வித்தியாசமாக ஒன்றும் பேசவில்லை ஐயா!
13