மின்னொளி
வயிர : (கடுப்பாக) அது எனக்குத் தெரியாது. இந்த மாதிரி இன்னொரு தரம் பார்த்தேன், நான் பொல்லாதவன்!
செல்ல :- நல்லது, நான் வருகிறேன். (செல்லத்துரை போகிறான்.)
வயிர :- மின்னொளி இது நல்லால்லே. மாமாகிட்டே சொன் னா, என்ன ஆவுந் தெரியுமா?
மின்னொளி :-ஆவதையும் போவதையும் அப்புறம் பார்த்துக்கொள்வோம். இப்போ, தனியாக இருக்கிற பெண்ணிடம் உனக்கென்ன பேச்சு? போ வெளியே!
வயிர :- என்னையா? ஒன் அத்தை மகனையா?
மின்னுெளி :- ஆமாம்.
வயிர :- அப்படியா சங்கதி? உம், சரி, நான் பாத்துக்கிறேன்.
(கருவிக்கொண்டே போகிறான்.)
நான்காம் காட்சி.
(இருளன் பூசாரி வீடு. உடைந்த நாற்காலியில் உட்கார் ந்து ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறார் செல்லத்துரை, ஒரு நோயாளி வருகிறான்.)
நோயாளி :- இருமிக்கொண்டே தம்பி பூசாரி ஊட்லே இருக்கிறாருங்களா?
செல்ல :- இல்லையே, வெளியே போயிருக்கிறார்.என்ன சங்கதி?
நோயாளி :- குளுரும், காய்ச்சலும் வந்து, பத்து
14