கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 பாவேந்தர் விருது' (1987 க்குரியது) பொற்பதக்கம், - கலைஞர் மு. கருணாநிதி, முதல்வர். தமிழ்நாடு அரசு, சென்னை - 1989 பொற்கிழி' - விக்கிரமன், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர், காரைக்குடி கவிஞர் இல்லம் - I993. பூங்கொடி நூலுக்கு இந்திராணி இலக்கியப் பரிசு ரு க000/இந்திராணி அறக்கட்டளை, கரூர் - 1993. "சிறந்த தமிழ்த் தொண்டிற்கான அரசர் முத்தையவேள் நினைவுப் பரிசில், வெள்ளிப்பேழை, பொற்குவை ரூ. 50,000/ அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை, சென்னை - 1993. 'இராணா இலக்கிய விருது பொற்குவை ரூ.10,000/'இரண்டாம் புரட்சிக் கவிஞர்' எனும் பட்டம் - தமிழ் இலக்கியப் பேரவை, ஈரோடு - 1994 கல்வி உலகக் கவியரசு விருது - அகில இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் - 1996 பொற்கிழி - பழைய மாணவர் பாராட்டு விழா. கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச் சிவபுரி - 1997 'கலைமாமணி விருது, பொற்பதக்கம்' - செல்வி பாத்திமா பீவி, ஆளுநர் - கலைஞர் மு. கருணாநிதி, முதலமைச்சர், தமிழ்நாடு அரசு, சென்னை - 1998. பிறகுறிப்புகள் இளம்பருவத்தில் இலக்கிய உணர்வை ஊட்டியவர் தாய்மாமன்துரைசாமி அவர்கள். 20 ஆம் அகவை வரைக் கடவுளைப் பற்றிய கவிதைகள் இயற்றினார். அவை கிடைத்தில (1939). 21ஆம் அகவை முதல் சமுதாயச் சூழல், மொழி, நாடு, இயற்கை இவற்றையே பாடி வந்தார் (1940).
பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/23
Appearance