4
எஸ். எம். கமால்
மறவர்கள் ஆட்சி செய்தனர் என்றும், விஜய நகர நாயக்கர்கள் தமிழகத்தைக் கைப்பற்றும் வரை மறவரது இந்த தன்னரசு நீடித்தது என்றும் தெரிகின்றது.[1] இதனைப் போன்று இன்னும் சில வரலாற்றுக் குறிப்புகளும் சேதுபதி மன்னர்களது தொன்மைச் செய்திகளும் இராமநாதபுரம் மானுவலில் வரையப்பட்டுள்ளன.[2]
மற்றும், சேதுபதி அரச வழியினர், பதினோராம் நூற்றாண்டில் பாண்டி மண்டலத்தைக் கைக்கொண்டு, ஈழத்தையும் வெற்றிக்கொண்ட ராஜராஜ சோழதேவன் இராமேசுவரம் கடற் பாதையைக் கண்காணிப்பதற்கு நியமித்த மறவர் தலைவரது வழியினர் என்றும், பாண்டிய நாட்டை கி.பி. 1170-ல் கைப்பற்றி இராமேசுவரம் கோவிலின் ஒரு பகுதியை நிர்மாணித்த இலங்கை தண்டநாயகனால் நியமனம் செய்யப்பட்ட பிரதிநிதியின் பரம்பரை என்றும் ஆசிரியர் தர்ஸ்டன் குறித்துள்ளார்.[3] சேது சமஸ்தான மகாவித்வானாக விளங்கிய திரு. ரா. ராகவையங்கார், குலோத்துங்க சோழனது காலத்தில் தஞ்சையிலிருந்து பாண்டி நாடு புகுந்த சோழரது தானைத் தலைவர்களாக இருந்து, நாளடைவில் தன்னாட்சி பெற்றவர்கள் சேது மன்னர்கள் என பல ஆதாரங்களை அளித்துள்ளார்.[4]
பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்துராசக் கவிராயர் புனைந்துள்ள கைலாய மாலையில், யாழ்ப்பாண நல்லூர் கோயிலை அமைத்த ஆரியச் சக்கரவர்த்தி, இராமநாதபுரம் சேதுபதி மன்னரது உதவியுடன் இராமேசுவரத்திலிருந்த அந்தணர்களை அங்கு வரவழைத்து அந்தக் கோயிலின் குருக்களாக நியமித்தார் என்ற செய்தியைச் சொல்கின்றது.[5]
- ↑ Mahalingam, T. V., Mackenzie Mss. pp. 200-212. (1975), Vol. I
- ↑ Rajaram Row, T., Ramnad Manual (1891), pp. 204, 205
- ↑ Edgar Thurston, Castes and Tribes of South India, Vol. V. pp. 25, 26.
- ↑ ரா. ராகவ ஐயங்கார், மகாவித்வான், சேது நாடும் தமிழும் (1932).
- ↑ Seshadri. Dr. Sethupathis of Ramnad (1972), Thesis, р. 62.