வீரகாவியம்
16
மூவகத்தின் வலிமைமிகப் பொலியக் கண்டு
நாவலத்துப் பெருங்கனகன் நாணி நின்றான்.
மூவகத்தின் பெயரோங்கி வலிவும் ஓங்கி
முன்னிற்கும் பகையின்றித் தலைமை தாங்கிப்
பூவகத்துப் பொலியுமதன் பெருமை கண்டு
புழுங்கிமனம் வெதும்பிஅழுக் காறு கொண்ட
நாவலத்துப் பெருங்கனகன் நாண முற்றான்;
நாடோறும் அந்நினைவால் வாட லுற்றான்;
நோவகத்துப் பெருகிவரப் பகைவர் நாட்டை
நுண்மதியால் வெல்லுதற்கு நினைத்தான் கேட்டை. 11
‘தோள்வலிமைப் படைசெலுத்தும் தலைவன் வேழன்
துணையிருக்க மூவகத்து மதலைக் கோவை
ஆள்வலிமை மிக்கிருந்தும் போரில் வெல்லல்
அரிதாகும்; மன்னனுக்குத் துணைநிற் பானைச்
சூழ்மதியாற் பிரித்தொதுக்கல் வேண்டும்; இன்றேல்
தோன்றலவன் உயிர்தானே பிரிதல் வேண்டும்;
நாள்வரு’மென் றுண்ணினைந்து வேந்த னோடு
நட்புரிமை பெருங்கனகன் பூண்டு நின்றான். 12
பூ – உலகம் நோவு – வருத்தம் உண்ணினைந்து – உன்நினைந்து.