பக்கம்:அன்பு மாலை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்பு மாலை

59

சோறு படைத்துத் தின்பதற்கே
துகளில் நிலத்தில் வந்திருந்தோம்;
ஈறு படைக்கும் காலமிலை
என்றே நினைப்பார் நொய்ம்மையுளார்;
வீறு படைத்த மாஞானி,
விமலம் சேரும் திருவுளத்தான்;
ஈறு படையா இன்பத்தான்
ராம்கு மார்பால் எய்துமினே.

151

துகள் இல் - குற்றம் இல்லாத ,நொய்ம்மை உளார் - சிறிய குணம் உடையார்.

இன்சொல் லாளன், வந்தவர்பால்
இளைய குழந்தை எனஇருப்பான்;
வன்சொல் பேசும் வகையறியான்;
மகிழ்ந்து மகிழ்ந்து சிரிக்கின்றான்;
நன்சொல் எல்லாம் உபதேசம்;
நாடும் கோலம் திருமூர்த்தி;
பொன்செய் வானும் போல்கின்றான்,
பூபன் ராம சுரத்குமார்.

152


பொன் செய்வான்-இரசவாதத்தால் பொன்னை உண்டாக்குபவன்.

கல்லைக் கனியாய்ப் பிசைகின்ற
கருணை யாளன்; உளத்தகத்தே
மல்லைச் செய்யும் குணங்களெல்லாம்
மடிந்து சாந்தி யுறவைப்பான்;
தில்லைக் கண்ணே ஆடுகின்ற
தேசன் போலச் சிரிக்கின்றான்:
எல்லை இல்லாப் புகழுடையான்
ராம் சுரத்கு மார்யோகி.

153


மல் - போர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/65&oldid=1460021" இலிருந்து மீள்விக்கப்பட்டது