கடிதம் கிடைத்த மறு கணமே சசிகுமார் திருநெல்வேலிக்குச் சென்றான். அங்கே தக்க உதவியோடு சசி அந்த விபச்சார மாளிகைக்குப் போனான். ராசாக்கிளி வழக்கம் போல இன்முகத்தோடு சசியை வரவேற்றான்.
முதலில் சசிக்கு டீ வந்தது - அடுத்து வெற்றிலை - பாக்குத் தட்டு வந்தது. சசி எதையும் தொடவில்லை. அவனது விழிகள் - கதவு இடுக்குகள், ஜன்னல் திரைகள் - இவைகளையே துளாவிக் கொண்டிருந்தன.
"தம்பி மாடிக்குப் போகலாமா?" பரிவோடு கேட்டான் ராசாக்கிளி.
கூட வந்தவர்களிடம் ஒரு சகிக்கிளை கொடுத்து விட்டு சசி, ராவுத்தரைப் பின்தொடர்ந்து மாடிக்குப் போனான்.
ஒரு சின்ன அறை : அதில் இரண்டு பேர் படுக்கக் கூடிய ஒரு பெரிய கட்டில். அந்தக் கட்டிலைச் சுற்றித் தழுவிய படி ஒரு ரோஜா நிறக் கொசு வலை.
இதெல்லாம் சசிக்குப் புது அனுபவம். துப்பறியும் நாயைப்போல் அவன் மோப்பம் பிடித்துக் கொண்டு சென்றானே தவிர தப்புச் செய்யப் போகிறாேம் என்ற எண்ணத்திற்கு அவன் உள்ளத்தில் அணுவளவும் இடம் கொடுக்க வில்லை.
"பேபி!"
ஒருத்தி வந்தாள்.
"இவளைப் பிடிக்கிறதா? இவர் மைசூர்க்காரி."
பிடிக்கவில்லை என்பதற்கு அறிகுறியாக சசி தலையை ஆட்டினான்.
"பாப்பா!"
இன்னொருத்தி வந்தாள்.
"இவள் கும்பகோணம், நன்றாக பரதநாட்டியம். ஆடுவாள்!"
"இவளையும் எனக்குப் பிடிக்கவில்லை. வேறு ஆள் இருக்கிறதா?"
ராசாக்கிளியிடம் யாரும் இப்படி பேசியதே இல்லை. காண்பித்தவளை அழைத்துக் கொண்டு கட்டிலறைக்குப் போய்விடுவது தான் வருகிறவர்களின் பழக்கம்.
"தம்பி, நீ சென்ற மாசமே வந்திருக்க வேண்டும். சுபத்ரா என்ற ஒரு மலையாளப் பெண் இருந்தாள். ரதிகூட அவளுக்கு வேலைக்காரியாகத்தான் இருக்கமுடியும், அவள் ஓடிப்போய்விட்டாள்" என்று