இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பட்டப் பகலில் சுட்டுப் பொசுக்கும்
- வெய்யில் தன்னிலே
- பாதித் துாரம் சென்ற வணிகன்
- களைத்துப் போயினன்.
வெட்ட வெளியில் தங்கு தற்கு
- நிழலில் லாததால்
- வேறே என்ன செய்வ தென்றே
- எண்ணிப் பார்த்தனன்.
கழுதை தன்னை அவ்வி டத்தே
- நிறுத்தச் சொல்லினன்,
- களைப்புத் தீரக் கழுதை கிழலில்
- அமர லாயினன்.
கழுதைக் கார முனியன் இதனைக்
- கண்டு கோபமாய்க்
- கண்டிப் பான குரலில் உடனே
- கூற லாயினன்:
வாட கைக்குக் கழுதை ஒன்றை
- மட்டுமே தங்தேன்.
- வாட்ட சாட்ட மாக இதனின்
- நிழலில் அமர்வதேன்?
கூட வேஇக் கழுதை நிழலைச்
- சேர்த்தோ பேசினீர்?
- கொடுக்க வேண்டும் கிழலுக் காகத்
- தனியே வாடகை”
52