இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாய்ந்த முள்ளும் என்னையே
- படுத்தும் பாடு கொஞ்சமோ?
ஒய்ந்து போனேன். இன்னமும்,
- உயிர்பி ழைத்து வாழ்வதோ ?
கொன்று என்னைத் தின்னுவீர்.
- கோடி கோடிப் புண்ணியம்.
ஒன்று மட்டும் முன்னரே
- உரைத்து விட்டுச் சாகிறேன்.
தின்னும் போது தொண்டையில்
- சிக்கி டாதி ருக்கவே,
முன்ன தாக எனது கால் .
- முள்ளை நீக்கும் நண்பரே !”
உண்மை என்று கம்பியே
- ஒநாய் மகிழ்ச்சி கொண்டது ;
பின்னங் காலில் முள்ளேயே
- பிடுங்கி எடுக்கப் பார்த்தது.
உற்று ஒநாய் பார்க்கையில்
- ஓங்கிக் கழுதை கால்களால்,
பட்பட் டென்று உதைத்தது;
- பற்கள் உதிரச் செய்தது!
56