இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அருகே இருந்த அரிய நாவல்
- மரத்தின் நிழலை அடைந்தாள்;-நீர்
பருக வேண்டிப் பலவும் எண்ணிப்
- பெரிதும் உள்ளம் உடைந்தாள். 4
மரத்தின் மேலோர் சிறுவன் கனிகள்
- பறித்தல் கண்டு மகிழ்ந்தாள் ;-அவள்
உரத்துக் கூவித் தனக்கும் சிறிதே
- உலுக்கிப் போடப் புகழ்ந்தாள். 5
'சுட்ட பழமோ? சுடுதல் இல்லாப்
- பழங்கள் தரவோ? சொல்லாய்-நின்
இட்டம் உரைப்பின் ஈவேன் உனக்கே
- இயம்ப வேண்டும் நல்லாய். 6
சிறுவன் கூறும் சொல்லின் பொருளைச்
- சிந்தை செய்ய லானுள்;-பொருள்
அறியா ளாகி ஐயம் தீரும்
- வகையில் வினவ லானுள். 7
'சுடுதல் இல்லாக் கனிதா என்றே
- சொல்லி முடிக்கு முன்னே-அவன்
கடிதே கிளேயைக் குலுக்க உதிரும்
- காயும் கனியும் என்னே ! 8
நாவல் மரத்தின் ந்லமார் கனிகள்
- நிலத்தில் இருத்தல் கண்டாள்-நீர்
ஆவல் மிகுந்த அவ்வைக் கிழவி
- அகத்தில் மகிழ்வு கொண்டாள்.
52