பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 124

ஆயிரம் ஆயிரம்

சுதந்திர வீரர்களின்

குருதிப் பூத்தானே சுதந்தரம்? நம்பி:

உண்மைதான்!

ஆனால்

வன்முறை வென்றதாக

வரலாறில்லை

நெப்போலியளின் வன்முறை

அவனுக்கு

அமைதியான சாவை

வழங்கவில்லை,

ஐரோப்பாவையே

அவன்

சுடுகாடாக்கினான்.

ஹிட்லரின் வன்முறை

ஜெர்மானிய இனத்தையே

அரை நூற்றாண்டுகள்

கூறுபோட்டு

ஆறத்துயரில் ஆழ்த்தியது. -

சதாம் உசேனின் வன்முறை அவன் நாட்டு மக்களைச்

சாக்கடைத் தண்ணீரையும்

குடிக்க வைத்தது.

வன்முறைப்புண்

புரையோடாமல் இருந்ததில்லை.

ഖങ്ങ

நீங்கள் சொல்வதில் பாதி உண்மை இருக்கிறது.

நம்பி:

விளக்கமாகச் சொல்,

ഖീങ്ങ

வன்முறையை விரும்பித் தேடிச் செயல்பவன்