பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

27

அறிவு அரிமா, எதைப் பற்றியும் கவலைப்படாமல், அந்த அவமதிப்பின் ஏளனச் சொற்களை ஏறிட்டும் பாராமல், கேளாமல், பொருட்படுத்தாமல், "எனது முடிவிலே எந்தவித மாற்றமும் இல்லை" என்று எதிர்வாதமிட்டார்

"எதிர் தர்க்கம் மட்டும் செய்யவில்லை அவர் எனது முடிவை எங்கு வேண்டுமானாலும் நின்று நிரூபிததுக் காட்டுவேன்" என்று பகிரங்கமாகச் சவால் விடுத்தார்!

பைசா பல்கலைக்கழகத்துப் பேராசிரியரான கலீலியோ ஒரு நாள், தனது மாணவர்களையும், தன்னுடன் பணியாற்றும் மற்ற பேராசிரியர்களையும் உடன் வருமாறு அழைத்துக் கொண்டு புகழ் பெற்ற பைசா நகரைத்தைச் சேர்ந்த சாய்ந்து கோபுரத்தின் அருகே வந்தார்.

அப்போது, யார் யார் கலீலியோ கருத்துக்கனை எள்ளி நகையாடி ஏளனம் பேசினாரோ? அவர்களை எல்லாம் அங்கே வந்து கூடுமாறு ஏற்கெனவே அவர் விடுத்திருந்த வேண்டுகோள்படி பலர் வந்து கூடினார்கள்.

இவர்களுக்கு இடையில் கலீலியோ பத்துப் பவுண்டு கன எடையுள்ள குண்டு ஒன்றையும், ஒரு பவுண்டு கன எடையுள்ள மற்றொரு இண்டையும் எடுத்துக் கொண்டு வேடிக்கையும் அறிவு வேட்கையும் கொண்ட அக்கூட்டத்தின் முன்பு, கலீலியோ பைசா நகர் சாய்ந்த கோபுரத்தின் உச்சிக்கே ஏறிச் சென்றார்.

கோபுரத்தின் உச்சியில் இரண்டு குண்டுகளையும் அருகருகே அவர் வைத்தார்! ஒரே நேரத்தில் அந்த இரண்டு குண்டுகளையும் கீழே தள்ளினார்!

கலீலியோ எழுப்பிய கண்டனக் குரலுக்கு ஏற்றவாறு இரண்டு குண்டுகளும் ஒரே நேரத்தில் தரையில் வந்து விழுந்தன! கூடியிருத்த பேராசிரியர் குழு, மாணவர் திரள்