பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

மக்கள் கூட்டம் அனைவரும் இந்தக் குண்டுகள் வந்து சேர்ந்த கணித நேரத்தை நேரில் பார்த்து ஆச்சரியப்பட்டு நின்றார்கள்.

அன்று வரை எழுதப்பட்ட நூல்கள், நூலாசிரியர்கள் பேராசிரியர்கள், இரண்டாயிரம் ஆண்டுகளாக கற்றுக் கொடுத்த தத்துவத் தவறு, அரிஸ்டாட்டிலின் தவறான தத்துவக் கணிப்பு, இவ்வளவு காலமாக மக்கள் நம்பி வந்த நம்பிக்கை எல்லாமே பொய்யாய் போய் விட்டதே என்று அங்கே கூடியிருந்தோர் வியந்து போனார்கள்.

அரிஸ்டாட்டிலின் கணிதக் கோட்பாடுகளைத் தகர்த்தெறிந்த கலீலியோ, மேலும்பல ஆய்வுகளைத் தொடர்த்து செய்து சோதனைகள் பல நிகழ்த்தினார்.

மேலே இருந்து கீழே விழும் பொருள்களைப் பற்றி அவர் மூன்று பொது விதிகளை உலகுக்கு எடுத்துரைத்தார். அந்த மூன்றும் இன்னும் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகளிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டு வருகின்றன.

அரிஸ்டாட்டில் கோட்பாடுகள் தவறு என்பதைக் கலீலியோ நிரூபித்தார்! தாம் கூறிய விதிகள் தான் உண்மையானவை என்பதையும் மக்களைக்கூட்டி அவர் மெய்ப்பித்துக் காட்டினார்.

கலீலியோ பிறப்பதற்கு முன்பு-ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரிஸ்டாட்டில் கிரீஸ் நாட்டில் தோன்றினார்.

உலகம் முழுவதையும் வென்று தமது ஆட்சியின் கீழ் கொண்டு வர விரும்பி; அதற்காகப் பல போர்க்களங்களை கண்டு வெற்றி பெற்றவன் மாவீரன் அலெக்சாண்டர். ஆந்த அலெக்சாண்டர்; இந்தியா வரை படையோடு வந்து இங்கும் சில வெற்றிகளை நாட்டிவிட்டு அவர் திரும்பிச்