நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
87
★ 'எல்லா கிரகங்களும் வானவெளியில் அதனதன் பாதையிலே ஒழுங்காகப் பறந்து செல்கின்றன. வான வெளியில் அவை நிலைகுலைந்து தாறுமாறாகப் பறந்து செல்லாமல் தடுக்கும் சக்தி எது?’’
என்ற கேள்வியை நியூட்டன் தனக்குத்தானே எழுப்பிக்கொண்டு அவர் அதற்குரிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்! வெற்றி பெற்று தனது கோட்பாட்டை நிலை நிறுத்தினார்!
★ ஒருநாள், அவர் அமர்ந்திருந்த தோட்டத்தின் மரத்திலே இருந்து ஓர் ஆப்பிள் பழம் கீழே விழுந்தது! அதைக் கண்ட நியூடன், இந்தப் பழம் மேலே போகாமல் கீழே வந்தது ஏன்? என்ற கேள்வியை எழுப்பியபடியே மேலும் ஆராய்ந்தார்.
★ அந்த பழம் வீழ்ந்த விந்தைக்கு கணிதக் கணக்கு மூலம் விடை கண்டு, ஆகர்ஷ்ண சக்தி என்ற கண்டு பிடிப்பைக் கண்டறிந்தார்! புவிஈர்ப்பு சக்தி என்று பிறகு அதை இந்தப் புவி புகழ்ந்தது ஆங்கில உலகம், அதை Gravitation அதாவது நிலவுலக மைய ஈர்ப்பாற்றல் என்று பெருமைபடுத்தியது.
★ கிரகங்களுக்கும் ஆகர்ஷ்ண சக்தி இருப்பதால் தான், அவை வானவெளியில் பறந்து போகாமல், சூரியனைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட ஓடுபாதையிலேயே ஓடுகின்றன என்பதை நியூடன் கண்டு பிடித்தார். இதற்கு ஆகர்ஷண சக்தி என்று பெயரிட்டார். புவியீர்ப்பு சக்தி என்றும் குறிப்பிட்டார்.
★ சந்திரனின் ஆகர்ஷண சக்தி கூடுவதாலும், குறைவதாலும்-கடல் அலைகளின் ஏற்றமும்-தாழ்வும் உருவாகின்றன என்பதையும், அதே அவரது ஆகர்ஷண சக்தி விளக்கி விடை கூறியுள்ளது.