பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரு பாட்டு:

“கண்ணில் சுடரிடுமின்னோளி நீ; நெஞ்சம்
கவிழ்த் திவிடுமெளனத் தேன் துளி நீ;
பெண்ணின் விலையிலாப் பொன்னணி நீ—
[இதழ்ப்
                           
பின்னே தவழ்புன்னகை மணி நீ!
கன்னம் சுழித்தோடும் காவியம் நீ; அதில்
காட்சிப்படம் தீட்டும் ஓவியன் நீ;
தன்னந்தனிமைக்குத் தான் துணே நீ—
[அன்பர்

தமைக்காணிலோ, கைவிடும் புணை நீ!
ஆசைக்குத் தூதுபோம் பைங்கிளி நீ அந்த
ஆசை, வாய்விட்டுப் பேசாமொழி நீ!
ஓசை கிளம்பாமல் கறுவன்-நாணமே
ஓடிப்போ; காதலி வந்துவிட்டாள்!...”

இத்துணை நாணத்தைத் துணை ஏந்தி, துணை வழி மறுகி, அணி எழில் குலுங்க. அவள் ஓடிட, அவன் சிரிக்கிறான் ஏன் தெரியுமா? அவன் காதலி வந்துவிட்டாள்!

காதலியைத் தரிசிக்கலாமே!

தந்தன தந்தன சந்தத் தமிழிசை
தண்ணிர்க் குடங் குலுங்க
வந்தவள் ஓர் மரப் பந்தர் நிழல் மிசை
வாழ்வினைக் கண்டுகொண்டாள்;
காதல் கேள்வனைக் கண்டு கொண்டாள்!

50