பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"தேரா மன்னா செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான் தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே! அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்திங்கு
என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரே!” எனப் "பெண்ணணங்கே!

கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று
வெள்வேற் கொற்றங் காண்” என, ஒள்ளிழை
"நற்றிறம் படராக் கொற்கை வேந்தே
என் காற் பொற்சிலம்பு மணியுடைய அரியே” எனத்
"தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி
யாமுடைச் சிவம்பு முத்துடை அரியே
தரு” கெனத் தந்து தான் முன் வைப்பக்
"கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே!"

(வழக்குரை காதை 50-72)

என்பது வழக்குரை காதைப் பகுதி! நேரிடையான நிரூபணத்தின் மூலம் கோவலன் குற்றவாளியல்ல என்பது நிரூபணமாகிவிட்டது!