273
7 பெரியாரை பிழையாமை
(இ-ன் வலியுடையார்க்கு வலியில் லாதார் இன்னாத வந் ாறச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றைக் கைகாட்டி அழைத்
ம் போலும், (எ-று).
மேற்கூறிய மூவரினும் அரசரைப்பிழைத்தலால் வரும் குற்றம் r;
ச. அவ. முற்பட உயிர்க்குக் கேடுவரும் என்றார்.
894 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு மென்னாத்
தகைமாண்ட தக்கார் செறின்.
(இ-ஸ்) எல்லாவகையும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும் மிக்க பொருளும் என்ன பயனுடையனவாம்; பெருமையான் மிக்க
தகுதியையுடையார் செறுவாராயின், (எ-று).
எல்லா வகையுமாவன-சுற்றமும், நட்டோரும், குற்றிளை யோரும், இல்லும், நிலமும் முதலாயின. வான்பொருள் - ஈட்டி வைத்த பொருள்களெல்லாம் அழியுமென்றது. 4.
895. யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
(இ- ள்) எவ்விடத்துச் செல்லினும் எல்விடத்தும் உளராகார்;
வெய்யவலியுடைய வேந்தனால் செறப்பட்டவர். (எ-று) .
இது, கெட்டுப்போனாலும் இருக்கலாவதோர் அரணில்லை
யென்றது. 5
896. எரிய ற் சுடப்படினு முய்வுண்ட முய்ய சக்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
(இ-ள்) தீயினால் சுடப்படினும் உய்தல் உண்டாம்; பெரியா
ரைப் பிழைத்தொழுகுவார் உய்யாச் , (எ-று).
இது முனிவரைப் பிழைத்ததனால் வருங்குற்றம் கூறிற்று. முற்பட உயிர்க்கேடு வருமென்று கூறினார். 6
89 7. இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்ய ச்
சிறந்தமைந்த சீரார் செறின்.