பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

17.

18.

20.

21.

22.

23.

24.

25.

26.

27.

28.

29.

30. 31.

32. 33. 34.

35.


பவ பந்த நிக்ரக வினோத சகளம்-பிறவித் தொடர்புகளைப் போக்குகிற, அதிசயமான, சகள" வடிவப் பொருள்.

சிற்பரம் பரானந்த சொருபம்-ஞான வடிவமும் மேலான இன்பமும் தருகின்ற உருவப் பொருள்.

பரிசயாதீதம் - பொறிகளாலும் மனத்தாலும் அறிவது,பரிசயம்; இவற்றாலும் அறிய முடியாதது.

சுயம் சதோதயம்" - சுயமாக எப்பொழுதும் ஒளிமயமாக விளங்குவது.

வரம்-உயர்ந்தது; மேலாக இருப்பது.

பரமார்த்த முக்த மெளனம்-மேலான ஞானமாகிய முக்தி யாகிய முடிபொருளைக் காட்டும் மோன நிலை.

படன வேதாந்தாநாதம்'-ஓதப்படுகின்ற வேதங்களின் முடிவா கிய உபநிடதங்களின் உச்சியில் உணரப்படும் பொருள்.

ஆகமாந்தாந்த கிருபாதிகம் - சைவ சித்தாந்தத்தின் முடி பொருளாய்த் தனித்து விளங்குவது. (நிர்+உபாதிகம்) உபாதிகம்-தனித்திருக்கும் தன்மை-(absolute).

பரம சாந்தம்-தூய சொருப நிலை.

பரநாத தத்துவாந்தம்-பரநாத தத்துவத்துக்கும் மேலேயுள்ளது.

சகச தரிசனம்-இயல்பாகத் தரிசிக்கப்படுவது. (உடலை வருத்தாமல் ஞானம் தலைப்பட்டுத் தரிசிக்கப்படுவது) .

பகிரங்கம் அந்தரங்கம்-வெளிப்படையாகவும் உண்முகமாக வும் அறியப்படுவது.

பரவியோமம்-மேலான ஆகாயம்.

பரம சோதிமயம் -மேலான ஒளிமயமானது

விபுலம்-எல்லையற்ற அகலமும் நீளமுமுடையது.

பரம்பரம்-மேலும் மேலும் உயர்வானது.

அனந்தம்-முடிவில்லாதது.

அசலம்- சலனம் (அசைவு) இல்லாதது.

பரக லோகாதிக்கம் - மேலுலகங்களிலும் தலைமையும் உரிமையும் உடையது.


3. சகளம்-உருவொடு கூடியது; நிட்களம்-உருவில்லாதது.

4. சதா உதயம் - சதோதயம்; சதா- எப்பொழுதும்.

5. 'ஓரும் வேதாந்தத்து உச்சியிற் பழுத்த சைவ சித்தாந்தம்’ என்பர் குமரகுருபர சுவாமிகள்,