பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்ல கதைகள்


இந்திய நாட்டின் பெருமையெலாம்
எடுத்துக் காட்டும் கதைகளையே
அன்னையும் பெரிய தாயாரும்
அன்பாய்க் கூறுவர் ஜவஹரிடம்.

இராமா யணமும் பாரதமும்
இன்னும் பலப்பல கதைகளுமே
சீராய்ச் சிறப்பாய்க் கூறிடுவர்;
சிறுவர் நேரு கேட்டிடுவர்.

முபாரக் அலிஎனும் ஒருபெரியார்
வீட்டில் கணக்குகள் எழுதுபவர்,
அபார மாகக் கதைசொல்வார்.
அவரை மிஞ்சவே ஆள் இல்லை!

அரபுக் கதைகள் அவர்சொல்வார்;
‘அற்புதம்' என்பார் ஜவஹர்லால்.
இரவில் சிறிதும் தூங்காமல்
எத்தனை யோகதை கேட்டிடுவார்;

22