இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மூன்று ஐயங்கள்
311
- “தொண்டையந்தார்வேந்தன் நரேந்திரப் போத்தரையன்
- வெண்கோட்டின் றென்பான்மிகமகிழ்ந்து-கண்டான்
- சரமிக்க வெஞ்சிலையர்ன் சத்ருமல்லே சம்மென்று
- அரனுக் கிடமாக அன்று.”[1]
என்பது.
பல்லவ மன்னன் (கி.பி. 719-775) இவனைப் பற்றிய பாக்கள் சில யாப்பருங்கல விருத்தியுரையுட் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ‘பல்லவமல்லன்’ என்ற பெயரையே சுட்டுகின்றது. அஃது எட்டாரைச் சக்கரத்தை விளக்க வந்த மேற்கோள் செய்யுள் ஆகும்.
- “.... ........... .....
- காடவர்கோன் திரு ஆரமிழ் தாடவர்க்”
- .........................
- “யாராழி பாய்ந்த விடந்தோ றழகிதாப்
- பாராளும் பல்லவ மல்லன் என்றா-ராய்ந்(து).....”
- .......................
- -பாரில்
- “தருமலிந்த வண்மைத் தலைத்தந்து மிக்க
- திருமலிந்து தீதிலவே யாக-உருமலிந்த
- என்னரசன் மல்லன் மதினிலை யேதிலர்கள்
- துன்னரிய வஞ்சினத்தான் தோள்.”[2]
யாப்புநரல் பெருக்கம் (கி.பி. 250-900)
கி.பி. 11ஆம் நூற்றாண்டில் யாப்பருங்கல விருத்தி செய்யப் பட்டது; உரையும் அதே காலத்தில் ஆனது. இதனில், சங்கத்தார் பாடல்கள் சிறுவரவினவாயும், வடமொழி வழக்குப்பற்றித் தோன்றிய