இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
களப்பிரர் யாவர்?
37
களப்பிரர் இடையீடு (கி.பி 200–300)
புகாரைத் தலைநகரமாகக் கொண்டு அச்சுத விக்ரந்தன் என்னும்
களப்பிர அரசன் ஆண்டு வந்தான் என்பதைப் புத்தத்தர் குறிப்பிடுதல் கொண்டு உணரலாம்.[1] அவர் பாலி மொழியில் ‘அபிதம்மாவதாரம்’ என்னும் நூலை எழுதியுள்ளார். அவர் தமது நூலில் மேற்சொன்ன செய்தியைக் குறிப்பிட்டுள்ளனர். அப்பொரியார் காலம் புத்த கோஷரது காலமான கி. பி. 350 ஆகும்.[2]