34 பாரதிதாசன்
இற்றைக்கு நின்தலை அற்றது! மற்றென்னை
என்னென்றுதா னினைத்தாய்?
வாள்பிடித்த புவி ஆளுமிராசர் என் தாள்பிடித்தே கிடப்பார்!-அட!
ஆள்பிடித்தால் பிடி ஒன்றிருப்பாய் என்ன
ஆணவமோ உனக்கு?
மீள்வதற்கோ இந்தத் தீமை புரிந்தனை
வெல்லத் தகுந்தவனோ?-இல்லை!
மாள்வதற்கே இன்று மாள்வதற்கே என்று
மன்னன் உரைத்திடவே,
உதாரன் மறுமொழி:
'மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் முகில்
வார்க்கும் மழைநாடா!-குற்றம் ஆம்என்று நீயுரைத் தால்குற்றமே குற்றம்
அன்றெனில் அவ்விதமே! கோமகள் என்னைக் குறையிரந்தாள்; அவள்
கொள்ளை வனப்பிலே-எனைக் காமனும் தள்ளிடக் காலிடறிற்றுக்,
கவிழந்த வண்ணம் வீழ்ந்தேன்!
பழகும் இருட்டினில் நானிருந்தேன்; எதிர் பால்நில வாயிரம்போல்-அவள் அழகு வெளிச்சம் அடித்த தென்மேல்
அடியேன் செய்த தொன்று மில்லை. பிழைபுரிந்தேனென்று தண்டனை போடுமுன்
பெற்று வளர்த்த-உன்றன் இழைபுரிச் சிற்றிடை அமுதவல்லிக்குள்ள
இன்னல் மறப்பதுண்டோ?