பொழுது புலர்ந்தது
மு. ஸ் லி ம் லீ க்
ஆயினும் அந்த முட்டுக்கட்டையை உபயோகிப் பதற்கு அனுகூலமாக நிற்பவர் முஸ்லிம் லீக் தலைவர் ஜின்ன சாகேப் ஆவார். அவர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராய் இருந்தவர். அந்தக் காலத்தில் அரசியலில் “ மத வேற்றுமை “களைக் கலப்பது அடாது என்று அழுத்தமாகக் கண்டித்தவர். அதனுல் மெளலான மகமது அலியை ‘மெளலான ‘ என்று அழைக்க மாட்டேன், “ மிஸ்டர் “ என்றுதான் அழைப்பேன் என்றுகட்டக் கூறியவர். அவ்வளவு தூரம் தேசிய உணர்ச்சி ததும்பிய அந்த ஜின்ன சாகேப்,இப்பொழுது நம்முடைய தேசத்தின் துர்அதிர்ஷ்டத்தால் வகுப்புவாத சிரோன்மணியாக ஆயிருக்கிறார்,
அவர் 1934-ம் வருஷத்தில் முஸ்லிம் லீகிலிருந்து தேசீயத்தை விலக்கி, தனி வகுப்பு ஸ்தாபனமாகச் செய்து அதற்குப் பலம் தேட ஆரம்பித்தார். ஆனல் முஸ்லிம்கள் அவருக்கு ஆதரவு அளிக்க முன்வரவில்லை. முஸ்லிம் களுக்கென்று தனித் தொகுதி ஏற்பட்டிருந்துங்கூட, முஸ்லிம்களில் 4 சதமானவர்களே, முஸ்லிம் லீக் அபேட் சகர்களுக்கு 1937-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் வோட் டுச் செய்தார்கள். அந்தத் தேர்தலில் காங்கிரஸ்காரர் களுக்கே அமோகமான வெற்றி கிடைத்தது. அவர்களே எட்டு மாகாணங்களில் மந்திரி சபைகள் அமைத்தார்கள். அதைக் கண்டு அரசாங்கம் பயந்துவிட்டதோ என்னவோ, அன்றுமுதல் முஸ்லிம் லீகுக்கு அதிகமான ஆதரவு