த. கோவேந்தன் 119
அமைதியின் வாயிலில் புகுபவனுக்கு இவ் உலகப் பேரரசுகளெல்லாம் துளசாகவே இருக்கும்;
அவற்றின் புகழ், கலைந்துபோகும் முகிலைப் போன்றி ருக்கும்;
அவற்றினால் ஏற்படும் இன் பங்கள் துாற்றப்படும் உமியைப் போன்றவைத்
அவனுக்கு அந்தப் புனிதமானவரின் குரல் கேட்கும்:*தன்னலத்தை வெற்றி கொண்டவனே தீவினையும் துயரத்தையும் வெட்டி வீழ்த்தியவனே,
நிழல்களையும் பொய்த் தோற்றங்களையும் கலைய வைத்தவனே,
தேடுதல் வாளை வீசி விடு,
கூறுபடுத்தும் வாளை உறையில் போடு;
இங்கே துயரங்கள் இல்லை-வேதனையும் இருளும் இல்லை;
முரண்பாடும் பாகுபாடும் இங்கே நுழையக் கூடாது.
நேர்மையைப் பணிவுடன் கடைப்பிடிக்கும் நீ எனது நீதிமுறைக் கட்டளையைக் கண்டு கொண்டாய்.
உண்மையை அமைதியாகத் தேடுபவனான நீ எனது இன்னமைதியைக் கண்டு கொண்டாய்,
அன்புறவையும் நல்லதையும் விரும்பும் நீ என்னைக் கண்டு கொண்டாய்;
உனது வீட்டை எனது நிலையான இருப்பிடத்திற்கு மாற்றிவிடு,
உனது போராட்டம் முடிவுற்றது, நீ ஆறுதல் பெற்று விட்டாய்.